பொரளை என்;.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தனித்து இயங்குவதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. தனித்து இயங்க முடியும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் செயற்படுமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும் சபாநாயகர் வேறு எதனையோ கூறுகின்றார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த சபாநாயகர் அவ்வாறு சந்தர்ப்பம் வழங்குகின்றார் இல்லை.
கட்சியின் யாப்பு விதிகள் நாடாளுமன்றிற்கு பொருந்தாது. நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு கட்சியின் செயலாளரது எழுத்து மூல அனுமதி சபாநாயகருக்கு அவசியப்படாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.