கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த மனைவி தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 43 வயதான சந்தேக நபர் காவல்துறையில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.