கொட்டதெனியாவில் வைத்து கொல்லப்பட்ட சிறுமி சேயாவின் மரபணு பரிசோதனை முடிவுகள் இன்று மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினராலே மரபணு பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு எதிர்வரும் 2ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கொட்டதெனியாவ சேயா சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்றழைக்கப்படும் துனேஷ் என்ற சந்தேக நபரே பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.