வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கஞ்சா பொதி இலங்கை எல்லை ஊடாக இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் திக்கம் பகுதிகளில் வசிக்கின்ற 47 மற்றும் 60 வயதானவர்களாக அடயாலம் காணப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.