கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்து, சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்ய பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
ஹற்றன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த சந்தேக நபரான பெண், இன்னொருவரது பையை திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.
இதனை பயன்படுத்தி குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது கைப்பையில் வீட்டிற்குத் தேவையான சிறிய மின்குமிழ்கள் காணப்பட்டதாக தெரிவித்த அதன் உரிமையாளர் ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.