வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முரண்பாடுகளால் பாதிப்புற்ற பிரதேசங்களுக்கான அவசரகால கருத்திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் அமுல்படுத்திய 198.11 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட கொக்காவில் துணுக்காய் வீதியின் 10 Km வீதி கடந்த 10.10.2011 தொடக்கம் 08.03.2013 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த வீதி தற்போது பாவிக்கமுடியாத அளவில் பழுதடைந்து வருகின்றது வீதியின் பல இடங்கள் குன்றும் குழியுமாக காணப்படுகிறது இதைவிட அண்மை நாட்களில் பெய்த மழை காரணமாக வீதியின் ஒரு பகுதி முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளது இவ்வாறான தரமற்ற செயற்பாட்டிற்கு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி அபிவிருத்தி செய்யப்படாமையால் மக்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும், இவ்வாறான தரமற்ற வேலைகளை அமுல்படுத்தியவர்கள் உடனடியாக இதனை சீர் செய்யவேண்டுமெனவும், வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரை இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.