கொக்குவில் பகுதியில் 2 ஆவது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சூசை சுதர்சன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த நபர் நேற்றைய தினம்(05) வேலை செய்துகொண்டிருந்த பொழுது 2 ஆவது மாடி கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதன்போது அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.