கொட்டாஞ்சேனை தாக்குதல் பின்னனி, பாதாள உலகக் குழுவா…?

327

கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தின் விளைவால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே நேற்றைய தினம் புளுமென்டல் வீதியில் துப்பாக்கி;ச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட காவல்துறை விசாரணகைளின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.மிக நீண்ட காலகமாக இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நிலவி வரும் மோதல் சம்பவமே நேற்றைய மோதலுக்கான காரணம் எனவும் அரசியல் காரணங்கள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தெமட்டகொட சமிந்த தரப்பிற்கும், புளுமென்டல் சங்க தரப்பிற்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெமட்டகொட சமிந்தவின் அச்சுறுத்தல் காரணமாக புளுமென்டல் சங்க நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

SHARE