கொட்டாதெனிய சிறுமி கொலை குறித்த மர்மம் நீங்குமா?

258

கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பான மர்மம் நீங்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன், இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரபணு ஒத்துப் பேவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சேயா சிறுமியின் தந்தை மற்றும் சமன் ஜயலத் ஆகியோரின் மரபணுக்கள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த என்பவரின் சகோதரரே இந்த சமன் ஜயலத் என்பவராவார்.
துனேஸ் பிரியசாந்தவின் மரபணு சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் ஒத்துப் போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மினுவன்கொட நீதிமன்றில் இன்றைய தினம் அறிவித்துள்ளனர்.

SHARE