கொட்டாதெனிய பொலிஸார் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியாகியுள்ளது!

293
1446706667_6519871_hirunews_HNDA

கொட்டாதெனிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களை தாக்கியமை உறுதியதியாகியுள்ளது.

சேயா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணைகளின் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டவர்கள் பின்னர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

சந்தேக நபர்களை மோசமாக தாக்கியதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.

SHARE