கொண்டாட்டத்திற்கு “குட்-பை” சொல்லும் ரியோ ஒலிம்பிக்!

156

 

பிரேசில் நாட்டில் நடந்து வரும் ரியோ ஒலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

31வது ஒலிம்பிக் திருவிழா ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த 5ம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தொடரில் அமெரிக்கா 43 தங்கம் உள்பட 116 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

27 தங்கம் உள்பட 66 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 26 தங்கம் உள்பட 70 பதக்கங்களுடன் சீனா 3வது இடத்திலும் உள்ளன. அதே சமயம் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பத்தக்கத்துடன் இந்தியா 66வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் 17 நாட்களாக நடந்து வரும் இந்த கோலாகல தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறை விழா நிகழ்ச்சிகளில் 3 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 200 நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடியாத பிரேசிலை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரரான பீலே நிறைவு விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

SHARE