கொத்து கொத்தாக மனித எச்சங்கள் – மக்கள் பீதி

181
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் மீட்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மவட்ட நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இன்று 17 மீண்டும் 72வது தடவையாக  அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த அகழ்வு பணியின்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாமா என சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அவ் மனித எச்சம் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய அகழ்வு பணியின்போதும் அதே போன்று கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்றுக்கு மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள் பயத்தை தோற்றுவிக்கும் வகையில் மிகவும் கொடுரமாக காணப்படுகின்றது. மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாமே என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் அகழ்வு பணிகளின்போதும் மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என தெரிகின்றது.
எனவே அகழ்வு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE