யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக தமிழ் மாணவன், மண்லொறி ஓட்டுனர் கொலை மற்றும் கிழக்கில் காணியதிகாரி நேசராஜா, மண்டூரில் மதியழகன், கொலை முயற்சி தொடர்ந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மீது இன்று மற்றுமொரு கொலை முயற்சி நடைபெற்றுள்ளது.
ஆனால் ஒவ்வொரு கொலை குற்றவாளி மாத்திரம் விடுவிக்கப்படுவது சர்வசாதரணமாக உள்ளது.ரவிராஜ் கொலை குற்றவாளி,ஊடகவியலாளர் நடேசன் கொலையாளி, பிரதீப் எக்ளிய கொட கொலையாளி, யோசப் Mp கொலையாளி கூட வருவார் போல வெளியில் சூழல் உள்ளது.
புலியை ஒழித்துவிட்டால் தற்போது நடைபெறும் கொலையாவும் அரசாங்கமும் அவர்களுடைய ஒட்டுக்குழுக்களிடம் இன்னும் ஆயுதம் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது.
ஏற்கனவே போரின் இறுதியுத்தத்தில் இறந்த தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாட்டு சபையால் தீர்ப்பு வழங்கவில்லை இப்படியான புது புதுசான கொலைகளை யாரிடம் நீதி கேட்பது.தமிழனை கடவுள்தான் காப்பாற்றனும் நிலையில் உள்ளோம்.
தற்போதைய சூழ் நிலையில் யாழ் குடாநாட்டின் அமைதியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் நீதிபதி இளஞ்செழியனின் பங்கு அளப் பரியது அதை தாங்க முடியாத நிலையில் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்யப் பட்ட நிலையில் இச் சம்பவம் இடம் பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி கொலை முயற்சி மேலதிக தகவல்!
நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு: யாழில் பதற்றம்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு நல்லூர் வீதியில் இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், அவரை நோக்கி 10 தடவை துப்பாக்கி சூடு நடத்திய வேளையில், அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் அதீத முயற்சியினால் நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர் அங்கிருந்த பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரது துப்பாக்கி கீழே வீழ்ந்துள்ள நிலையில், சந்தேகநபர் சாதுர்யமாக பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் சந்தேக நபர் வைத்திருந்த துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருவதுடன், விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.