செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் வண்டி மட்டக்களப்பு கண்டி பிராதன வீதியில் உள்ள மியான் குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது .
பாதையை கடக்க முயன்ற மாடுகளுடன் மோதியே இந்த பாரிய விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது. குறித்த பஸ் வண்டியில் பயணித்த பிரயாணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்த விபத்தில் சில மாடுகள் மரணித்துள்ளதுடன் பஸ் வண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.