கொழும்பில் பல பாகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்! தடுப்பதற்கு 2 வருடங்கள் தேவை!

268

flood6-2

அதிக மழை காரணமாக கொழும்பு நகரின் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளதாகவும் அதை தடுப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் செல்லும் எனவும் கொழும்பு மாநகரசபை ஆணையார் வி.கே.அநுர தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் இதன் போது அதிக வாகன நெரிசலும் ஏற்பட்டது.

இதனை தடுப்பதற்கு தற்போது பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையார் வி.கே.அநுர கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் கேட்ட போது மழையை தொடர்ந்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு முறையான கான் வசதி இன்மையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில், இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் வட மாகணங்களில் 75 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டல திணைக்களத்தின் நிபுணர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE