குறித்த அறிவித்தலுக்கு அமைய, மோட்டார் சைக்கிளில் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 10 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
கார் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 30 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
முச்சக்கரவண்டி ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ரூபாய் அறவிடப்படுவதாகவும்,
அனைத்துவிதமான லொறி வகைகளும் ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 50 ரூபாய் அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை இத்திட்டத்தை இன்று தொடக்கம் முன்னெடுக்கவுள்ளது. மிகவும் சிறந்த சாலை ஒழுக்கம் மற்றும் மிகவும் முன்னேற்றகரமான வாகன தரிப்பிடம் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினம் தோறும் கொழும்பு காரியாலயங்களில் தொழில் நிமித்தம் வருகை தரும் வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் காரணமாக தாம் தினமும் 250 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.