கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

297
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

இவரது சிறிலங்கா பயணத்தின் முக்கிய நோக்கம் கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் அமெரிக்க தூதரக வளாகத்தைப் பார்வையிடுவதே என்று தெரியவந்துள்ளது.

அதேவேளை, கொழும்பு வந்துள்ள பற்றிக் கென்னடி அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.

கொழும்புத் துறைமுகத்தின் சுங்கப் பிரிவை நவீனமயப்படுத்தவும், கொள்கலன்களை ஆய்வு செய்யவும் அமெரிக்கா பயிற்சி்களையும், நவீன கருவிகளையும் வழங்கியுள்ளது.

SHARE