கொட்டாஞ்சேனை – சாந்த பெனடிக் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மூன்று சடலங்கள் இன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை ,மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய நிலையில் அவர்களின் சடலங்கள் தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.