கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சிறு தொழில் வியாபாரிகள் பாரிய ஆர்பாட்டம்

111

 

புறக்கோட்டை பகுதியில் சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

இந்திய வியாபாரிகளால் முதன் முறையாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சிறு தொழில் வியாபாரிகளை நசுக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும், இலங்கையிலுள்ள இந்திய வியாபாரிகளை தடை செய்ய வேண்டாம் மற்றும் சிறு வியாபாரிகளின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE