கொழும்பு – மட்டக்குளி அருள்மிகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று அதிகாலை முதல் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
அருட்கவியரசு, பண்டித ஆச்சாரிய விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடாத்தப்பட்டது.
இதன்போது தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேஷன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.மகேஸ்வரன் ஆகியோரும் இன்றைய தினம் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.