கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்

96

 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள்
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE