கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை கோட்டை, புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.