கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

376

கோடை காலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும்.

கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி என இப்படியே அடுக்கி கொண்டே போகலாம்.

வெளியில் செல்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள், இப்பவே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் அப்பாடா சுட்டெரிக்குதே என புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் ஈஸியாக நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளும், எந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, எந்த மாதிரியான ஆடைகளை அணிவது என பலருக்கும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

என்ன உணவுகளை சாப்பிடலாம்?

கோடைக்காலத்தில் நமது உடலுக்கு அதிகளவு நீர்ச்சத்து தேவைப்படும். காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது, ஆனால் மாமிசத்தை தவிர்க்க வேண்டும்.

வியர்வை போன்றவற்றின் மூலம் உடம்பிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேறும்போது உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது.

எனவே, வெள்ளரியை சாப்பிட மறந்துவிடாதீர்கள், அடுத்ததாக, லெட்யூஸ், இதில் 90 சதவீதம் தண்ணீர்தான். எனவே காய்கறிக் கலவையாக லெட்டூஸை சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக தண்ணீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்குத் தடை போடக்கூடியது.

தக்காளிக்கு அதன் தனிச்சிறப்பான சிவப்பு நிறத்தைத் தரும் “லைக்கோபீன்” என்ற வேதிப்பொருள், வெயில் காலத்தில் நமது சருமம் வெயிலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. தக்காளியில் “வைட்டமின் ஏ” சத்தும் அதிகமாக உள்ளது.

இதைத் தர்ப்பூசணி என்பதை விட “தண்ணீர்ப்பூசணி” என்றே கூறலாம்.

வெயில் வாட்டும் நேரத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, புதிதாகத் துண்டு போடப்பட்ட, சாறு நிறைந்த தர்ப்பூசணியை சாப்பிடலாம். தண்ணீர்ச் சத்து நிறைந்த, கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று.

ஸ்ட்ராபெர்ரி அதிகமாக தண்ணீர்ச் சத்து கொண்டது. தவிர ” விட்டமின் சி” சத்தும் மிக்கது. அதிகமான சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பாதிப்புகளை இது சரிப்படுத்தக்கூடியது.

எந்த மாதிரியான உடைகளை அணிவது?

இவை தவிர ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மற்ற ஒரு வேதிப்பொருள் “பிளேவனாய்டு” என்பதாகும். இது புற்றுநோய்க்குத் தடை போடக்கூடியது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டிவிடும். இதனால் உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்படும்.

வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. இதற்கு வெங்காயத்தில்உள்ள “குவர்சடின்” என்ற வேதிப்பொருளே காரணம் ஆகும்.

இது தவிர இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்றவையும் நன்மை பயப்பவைதான். எனவே,கோடையில் அதிக பழங்களை சாப்பிடுங்கள்.

நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள

கோடை காலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் உடலில் பல நோய்களை உண்டாக்குகிறது.

தகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே இத்தகைய நோய் தாக்குதல்களில் இருந்து எளிதில் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சின்னம்மை

இந்த வெயில் காலத்தில் நம்மை எளிதில் தாக்கும் நோய்களில் ஒன்று சின்னம்மை. இது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் ஒன்றாக உள்ளது.

இந்த நோயால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதில் இருந்து திரவம் வெளியேறும். இதன் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். தவிர, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் தும்மல், இருமல் போன்றவற்றில் இருந்தும் மற்றவர்களுக்கு எளிதாக பரவக் கூடியது.

திடீரென காய்ச்சல், தலைவலி, தொண்டையில் புண் ஏற்படுதல் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். இவை 2 நாட்களுக்கு ஒரே நிலைமையில் தொடர்ந்த வண்ணம் இருக்கும், அத்தோடு ஒன்றிரண்டு கொப்புளங்கள் தோன்றி அவை உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அதே போல் தனிமைபடுத்திக் கொள்வது மற்றவர்களுக்குநல்லதாக அமையும்.

Varicella zoster என்னும் வைரஸால் வரும் இந்த நோய் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வரும். அதன் பின்னர் நமது உடலில் இயற்கையாகவே அந்த வைரஸ்க்கான எதிர்ப்புசக்தி உற்பத்தியாகி விடும்.

முன் எச்சரிக்கையாக இதற்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இருப்பினும் சுத்தமாக இருப்பது தான் இந்த கோடை கால நோயை தடுக்கும் சிறந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை.

தட்டம்மை

கோடை காலத்தில் மிரட்டும் மற்றொன்று தட்டம்மை. இதுவும் கிட்டத்தட்ட சின்னம்மை போன்று தான்.

காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டையில் புண், கண்கள் சிவந்து போதல் ஆகியவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள்.

இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அடுத்த 3-5 நாட்களுக்குள் தட்டம்மை சொறி தோலில் சிவப்பு நிறத்தில் தோன்ற ஆரம்பித்து விடும். இது கை, கால், முகம் என உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து தொல்லை கொடுக்கும்.

Paramyxo என்னும் வைரஸால் ஏற்படும் இந்த நோய் முக்கியமாக குழந்தைகளை குறிவைக்கிறது. கோடைகாலத்தில் இதற்கான தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போட்டுக் கொள்வதுநல்லது.

மஞ்சள்காமாலை

அனைத்து காலத்திலும் அச்சுறுத்தும் மஞ்சள் காமாலை கோடை காலத்தில் எளிதாக வந்து விடுகிறது. இது நீர் மூலம் பரவும் நோய் ஆகும்.

அசுத்தமான தண்ணீர், சுத்தமில்லாத உணவுகள் மஞ்சள் காமாலை ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

Hepatitis A என்னும் இந்த வைரஸால் தான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. தோலில் ஏற்படும் மஞ்சள் நிறம் மற்றும் அரிப்பு, அடர் வெண்மை கண்கள், வெளிரிய நிறத்திலான மலம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.

இதற்கு தடுப்பூசிகள் கிடைத்தாலும், சுத்தமான இடங்களில் உணவு உட்கொள்ளுதல், நீரை இரு முறை நன்கு கொதிக்க வைத்து குடித்தல் போன்றவற்றை மூலம் இந்த நோயை தடுக்கலாம்.

டைபாய்டு

இதுவும் அனைத்து காலத்திலும் ஏற்படக் கூடிய ஒரு வகை நோய். உணவு பழக்க வழக்கங்களால் இந்த நோய் கோடை காலத்தில் அதிகமாக தாக்குகிறது.

Salmonella typhi எனப்படும் வைரஸ் இந்த நோய்க்கு காரணமாக இருக்கிறது.

அதிக காய்ச்சல், சோர்வு, பலவீனமாக இருத்தல், வயிற்றில் வலி, தீராத தலைவலி, பசியின்மை ஆகியவை இந்த நோயின் அறிகுறியாகும்.

இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைஉடனடியாக அணுகிக் கொள்வது அவசியம்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு இரு விதமான மருந்துகள் கிடைக்கின்றன. ஒன்று நோய் கிருமியை முற்றிலும் அழிக்க கூடியது. மற்றொன்று மாத்திரைகள் மூலம் தற்காலிகநிவாரணம் பெறுவது.

பொன்னுக்குவீங்கி (Mumps)

கோடை காலத்தில் குழந்தைகளை அச்சுற்றுத்தும் கொடுமையான தொற்றுநோய் இது. நோய் தோற்றுக் கொண்டவர்களின் தும்மல், இருமலில் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகபரவி விடும்.

கழுத்தின் அடிப்பகுதியில் உமிழ் நீர்ச் சுரப்பிகள் பூரிப்படைந்து வீக்கம் போல் காணப்படும். இதுதான் இந்த நோயின் முக்கிய அறிகுறி ஆகும்.

இதோடு காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, சோர்வு, பசியின்மை, கழுத்தின்அடிப்பகுதியில் உள்ள உமிழ் நீர்ச் சுரப்பிகள் பெரிதாகிக் கொண்டே போவது என இந்த நோய் அதிக சிக்கல் கொடுக்கும். ஆனால் இந்த நோயினை முன்னதாகவே தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

இது தவிர, தோல் உரிதல், சூட்டினால் வரும் பக்கவாதம், வேர்க்குரு,உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஆகியவையும் கோடை காலத்தில் அதிகம் வரக்கூடியதாகும்.

சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருத்தல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தல் ஆகியவை மட்டுமே இந்த கோடைகால நோய்களை தடுக்க முக்கியமானதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

SHARE