கோண்டாவில் விபத்து; ஒருவர் சம்பவ இடத்தில் பலி!

295

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக – பலாலி வீதியில் வீதியோரமாக நின்றவரை யாழ்ப்பாணத்திலிருந்து உரும்பிராய் நோக்கிப் பயணித்த கூலர் ரக வாகனம் மோதித் தள்ளியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த சீனியர் ஞானசேகரம் (வயது 53) என்பவரே உயிரிழந்தார்.

 

accidents சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- குறித்த வீதி ஊடாக உழவு இயந்திரத்தில் சல்லிக் கற்களை ஏற்றிச்சென்றவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்து உரையாடியுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வீதியோரமாக தெலைபேசியில் அவர் உரையாடிக்கொண்டிருந்த சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவரை மோதித்தள்ளி அருகிலிருந்த மின்கம்பத்தையும் மோதி அதன் பின்னர் காணி ஒன்றுக்குள் புகுந்து நின்றது. சம்பவ நேரம் அங்கு நின்றிருந்த பொலிஸார் மாயமாகியிருந்தனர். பின்னர் வேறு பொலிஸாருடன் அவர்கள் அங்குவந்து சடலத்தையும் வாகனத்தையும் அகற்ற முற்பட்டுள்ளனர். அதனால் ஊர் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. பின்னர் முறைப்படி விசாரணைகளை நடத்தி சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் வாகனமும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

accident

SHARE