கோத்­த­பாயவின் குடி­யு­ரிமை ரத்துச் செய்­யப்­ப­டலாம்???

338

மிக் தாக்­குதல் விமான கொள்­வ­னவு தொடர்­பான கொடுக்கல் வாங்­கல்கள் சம்­பந்­தப்­பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்­பந்­த­மாக விமா­னப்­ப­டையின் சட்­டப்­ப­ணிப்­பா­ள­ரிடம் விட­யங்­களை கேட்­ட­றிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, எதிர்­வரும் 25ஆம் திகதி இது சம்­பந்­த­மாக விப­ர­மான அறிக்­கையை தாக்கல் செய்­யு­மாறு நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்ளார்.

வழக்­கிற்கு தேவை­யான முக்­கிய ஆவ­ண­மான மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பான மூல ஆவ­ணங்­களை சட்ட ரீதி­யாக எவ­ரு­டைய பொறுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவை சரி­யான முறையில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான பதிவு சாட்­சி­யங்கள் இருக்­கின்­றதா?.விமா­னப்­ப­டையின் எந்த அதி­கா­ரியின் பொறுப்பில் ஆவ­ணங்கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆவ­ணங்கள் காணாமல் போயுள்­ள­தாக தெரிந்து கொண்ட பின்னர், எடுத்த நட­வ­டிக்கை என்ன என்­பது குறித்த அறிக்­கையை எதிர்­வரும் 25ஆம் திகதி நீதி­மன்­றத்தில் முன்­வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

நிதி மோசடி விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் ஜய­சுந்­தர, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரான்சிஸ் ஆகியோர் விசா­ர­ணை­களின் முன்­னேற்றம் குறித்து நீதி­மன்­றத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

2006ஆம் ஆண்டு நான்கு மிக் விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்து சரி­யான முறையில் விசா­ரணை நடத்தி, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டால், முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் குடி­யு­ரிமை கூட ரத்துச் செய்­யப்­ப­டலாம் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்திருந்தார்.gotabaya

SHARE