பீப் பாடல் பிரச்சனை இன்னும் முடியவே இல்லை. சிம்புவிற்குசென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் சிம்பு, என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அதோடு போலீஸ் முன்பு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டார். நீதிபதியும் சிம்புவிற்கு வருகிற 29ம் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டார்.
இந்நிலையில் அனிருத் நேற்று இரவு 11 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அனிருத் பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றி என்று தன் டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.