க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் 28ஆம் திகதி வெளியீடு சனத் பூஜித..!

128

கடந்த 2017ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அன்றைய நாள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடமுடியும் என்றும் அதற்கு அடுத்த நாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு குறித்த பெறுபேறுகள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

SHARE