சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க மறுத்த ரவூப் ஹக்கீம்

209

நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க முடியாதென முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றை கலைக்கலாமென உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் இந்த வாதத்தை ஏற்க முடியாதென குறிப்பிட்ட ஹக்கீம், நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படலாமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால், நாளை நாடாளுமன்றம் கூடுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE