சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு:
சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு என பிரதி ஊடக அமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்படும். அதற்கான பலம் ஆளும் கட்சிக்கு அதிகரித்துச் செல்கின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலமானது இலவசக் கல்வி சட்ட மூலத்திற்கு நிகரானது.
இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமை ஒட்டுமொத்த மகளிர் சமூகமும் அடைந்த வெற்றியாக கருதப்பட வேண்டுமென கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார்.