குறித்த ஐந்து இளைஞர்களும் கடந்த ஜனவரி 08ம் திகதி பேருவளை பிரதேசத்தில் இருந்து படகொன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி கடல்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அவுஸ்திரேலியா கடல் எல்லையில் இவர்கள் பயணித்த படகை மறித்த அந்நாட்டுக் கடற்படையினர் இளைஞர்கள் ஐவரையும் கைது செய்து அவுஸ்திரேலியா குடிவரவுத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாங்கள் மீன்பிடித் தொழிலாளர்கள் என்றும் காற்றின் காரணமாக திசை தப்பி கடலில் அல்லாடிக் கொண்டிருந்தபோது அவுஸ்திரேலியக் கடற்படையினர் தங்களைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை நாடுகடத்துமாறு அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் பிரகாரம் இன்று அதிகாலை இளைஞர்கள் ஐவரும் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர்களை தடுத்துவைத்துள்ள குடியகல்வுத்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.