மணிரத்னத்தின் கடல் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாக இருந்தவர் அக்ஷரா ஹாசன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
எனவே ஷமிதாப் என்ற பாலிவுட் படத்தில் தன்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார் அக்ஷாரா. தற்போது இவர் லிங்குசாமி இயக்க இருக்கும் சண்டைக்கோழி இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறுப்படுகிறது.
இது பற்றி லிங்குசாமி கூறுகையில், சண்டைக்கோழி இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்க அக்ஷராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.