இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் “உலகளாவிய செயல்திறன் தலைவராக” பணியாற்றுகிறார்.
அதேபோல், இங்கிலாந்து “HUNDRED” போட்டித் தொடரில் “சதர்ன் பிரேவ்” அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.
எனினும் மும்பை இந்தியன்ஸுக்குச் சொந்தமான MI Emirates மற்றும் MI Cape Town போன்ற அணிகளுக்கு அவர் பங்களிக்க வேண்டியிருப்பதால் அடுத்த ஆண்டு சதர்ன் பிரேவ் அணியின் பொறுப்புகளில் இருந்து விலகப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.