சந்திமாலுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் அனுமதி

433

 

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திமாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்து கருத்து கூற முடியும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE