சந்திரயான் 3 -ன் அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கும் இரு நாடுகள்

154

 

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 பற்றிய தகவல்களை இந்தியா எப்போது பகிர்ந்து கொள்ளும் என இரு நாடுகள் ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

சந்திரயான் 3 -ன் வெற்றி
இந்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில், “நிலவு மற்றும் சூரியனின் பயணங்கள், இந்தியா வளர்ச்சியடைந்து வருவதை அடையாளப்படுத்துகின்றன. இதுவரை நிலவில் யாரும் தரையிறங்காத பகுதியில் சந்திராயன் -3 விண்கலம் தரையிறங்கியது.

இந்த வெற்றி மூலம், வளிமண்டலம், கனிமங்கள் மற்றும் வெப்ப நிலைகள் பற்றிய முக்கியமான தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார்.

இரு நாடுகள்
மேலும் அவர், “இந்த பயணத்தை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இந்தியாவுக்கு முன்பே தொடங்கியது. ஆனால், தற்போது இந்த இரு நாடுகளும் சந்திரயான் -3 திட்டத்தின் அடுத்த தகவலை இந்தியா எப்போது தரும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா 1969 -ம் ஆண்டு நிலவில் மனிதனை தரையிறக்கியது. ஆனால், நம்முடைய சந்திரயான் -3 விண்கல திட்டம் மூலம் தான் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தது” என்றார்.

SHARE