சபாநாயகர் தலைமையில் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம்

110

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது சமகால அரசியல் நிலவரம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் எப்போது விவாத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட உள்ளகதாவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE