பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுக்கு 6 மாத கால சர்வதேச கிரிக்கட் தடை விதித்து அந் நாட்டு கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் ஊடாக ரசிகர்களை அவமதிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இந்த 6 மாத கால சர்வதேச கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து 6 மாதங்களுக்கு சபீர் ரஹ்மானால் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் எதிலும் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சபீர் ரஹ்மான் பங்களாதேஷ் சார்பில் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 54 ஒரு நாள் போட்டிகளிலும் 41 T20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.