சமத்துவம் எப்போது? தமிழ் பிராந்திய நாளிதழ்கள்: GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இருந்து

325
தமிழ் மக்களுக்கான சமத்துவம் எப்போது என்ற கேள்வியை அல்லது எதிர்பார்ப்பை சில தமிழ் பிராந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கள் வெளிப்படுத்தி எழுத்தப்பட்டுள்ளன.
குளோபல் தமிழ் குழுமத்தின் உலகத் தமிழர் வானொலியான GTBC.FM வழங்கும் பத்திரிகை கண்ணோட்டத்தில் இன்றையே நாளேடுகளின் ஆசிரியர் தலையங்கள் பற்றிய பார்வையை குளோபல் தமிழ் வாசகர்களுக்காக தருகின்றோம்.
சமத்துவம் எப்போது?
சமத்துவ சகவாழ்வுப் பாதையில் அரசு கால் பதிப்பது எப்போது? என்ற தலைப்பில் தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இனவாதம் சார்ந்த கடும் போக்கு நிறைந்த கொள்கைள் நிராகரிக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினர்களும் இந்த நெகிழ்வுப் போக்கை பின்பற்ற வேண்டும் என்றும் உதயன் நாளிதழின் ஆசிரியர் தலையங்கள் துவங்குகிறது.
ஒட்டுமொத்தத் தமிழ் மக்களதும் வாழ்வுமீதும் இனவாத இரும்புக் கரத்தை பதித்து கிழித்து எறிந்து அதன் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும்போது பாதிக்கப்படும் தமிழர் எதற்கும் தயங்காத பின்னிற்காக போக்கை எடுப்பது பரிணாம வளர்ச்சி என்றும் அதன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கு கடந்த காலத்தில் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகளே காரணம் என்றும் அந்தக் களத்தை உருவாககியது தென்னிலங்கை அரசியல் பிரகிருதிகளே என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் உண்மையை புரிந்து கொள்ளும் நிலையும் தகுதியும் முப்பது ஆண்டுகள் கழிந்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருப்பதுடன் அதனை உணர்ந்து சமத்துவ சக வாழ்வுப் பாதையில்  புதிய அரசு கால் பதிப்பது எப்போது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
செயல் தேவை
சொல்லில் மட்டுமல்ல செயலிலும் வேகம் வேண்டும். இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் தரப்புடன் உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்தைகளை தொடங்கியிருப்பதையும் அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டிய யதார்த்தத்தையும் யப்பானிய பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளதாக ஆசிரியர் தலையங்கம் தொடங்குகிறது.
இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன விரிசல் வளர்ச்சியடைந்து வருவதாகவும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட இலங்கையின் அடையாளத்துவத்தை வலுவானமுறையில் நிலை நிறுத்தினால் இன மத பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று பிரதமர் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனங்கள் மத்தியில் பரஸ்பர சமத்துவம், சகல தரப்பையும் உள்வாங்கிய தன்மை கொண்ட அணுகுமுறை ஊடாக அமைதியான சக வாழ்வை மேம்படுத்தும் விருப்பத்தை இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பங்களிப்பை சகல மட்டத்திலும் உறுதிப்படுத்தும் பொறிமுறையை இதய சுத்தியுடன் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை காணும் வழிமுறையை கண்டடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் அரசியல் சமூகம் ஒன்றுக்கும் இடையில் சமத்துவமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான அதிகாரப்பகிர்வு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதன் மூலம் சமாதான சக வாழ்வை உறுதிப்படுத்த இயலும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேசத்திற்கு புதிரய அரசு உரத்த தொனியுடன் வாக்குறுதியளித்து அந்த விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் யாழ் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் மேலும் குறிப்பட்டிருக்கிறது.
SHARE