சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் பிரியா ஆனந்த்தின் புகைப்படம்

150
பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்

பிரியா ஆனந்த்
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.

தமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.
ப்ரியா ஆனந்த்
‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
SHARE