சம்பள பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு

292

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை, நாராஹேன்பிட்டியவிலுள்ள தொழிற் திணைக்களத்தில் நேற்று (30) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

உற்பத்தி திறன் அடிப்படையிலே சம்பள உயர்வை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளம் தெரித்ததையடுத்து,  அதை ஏற்றுக்கொள்ள முடியாதென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையிலே எவ்வித தீர்மானமும் இன்றி, திகதி குறிப்பிடப்படாமல் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

SHARE