உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் மக்களுக்காக 16 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கில் குடியமரவுள்ள 1,971 குடும்பங்களுக்கும் திருகோணமலையின் சம்பூரில் மீள்குடியேறவுள்ள 204 குடும்பங்களுக்கும் தலா 38 ஆயிரம் ரூபா வீதம் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.