சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவிலுக்கு அருகில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பூர் பிரதேசமானது கடந்த 9 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, கடந்த 25 ஆம் திகதியே பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக வந்தவர்கள் நேற்றைய தினம் குறித்த கிணற்றினை துப்பரவு செய்த சந்தர்ப்பத்திலேயே இந்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.