சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு இன்று பிரவேசம்

283
ஐக்கிய தேசியக் முன்னணியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்றைய தினம் தீர்மானித்திருந்தது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது என்ற தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்த நிலையில், அதற்கான அங்கீகாரத்தை கட்சியின் உறுப்பினர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE