30 வயதை கடந்ததுமே கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பித்துவிடுகின்றது.
இதனால் நம் முகத்திலுள்ள கன்னப்பகுதிகளில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் தளர ஆரம்பித்து வயதனாது போல தோற்றமளிக்கின்றது.
இதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு. இது பல விதங்களில் நமது சருமத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
அதற்கு நாம் இயற்கையாக கிடைக்கும் பழங்களில் செய்யப்படும் மாஸ்க்குகளை போடுவதனால் முகம் இயற்கையாகவே பொழிவு பெறுகின்றது. இதற்கு திராட்சை மாஸ்க் பெரிதும் உதவி புரிகின்றது.
தற்போது இந்த மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிவப்பு திராட்சை – சில
- ஸ்ட்ரா பெர்ரி – சில
- யோகார்ட் – 2 டீ ஸ்பூன்
- தேன் – 1 ஸ்பூன்
செய்முறை
சிவப்பு திராட்சை மற்றும் ஸ்ட்ரா பெர்ரியை நன்றாக மசித்துக் கொண்டு அதில் யோகார்ட் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள்.
சில மணி நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும்.
15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். முகம் புதிதாய் தெரியும்.
சிவப்பு திராட்சையிலும், ஸ்ட்ரா பெர்ரியிலும் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அதிலும் ஸ்ட்ரா பெர்ரியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இவை சுருக்களை நீக்குகிறது. சரும செல்களை உயிர்ப்பிக்கிறது.
செல் வளர்ச்சி முகத்தில் அதிகரிக்கும். இதனால் மீண்டும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இப்படி இளமையை நீட்டிக்கச் செய்யலாம். அது தவிர நாம் சேர்க்கும் யோகார்டில் உள்ள கிருமி எதிர்ப்பு திறன் சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது.
ஈரப்பதத்தை முகத்திற்கு அளிக்கிறது. தேன் சருமத்திற்கான அருமையான குணம் பெற்ற பொருளாகும். இவை சருமத்தை மென்மையாக்கும். மிளிரச் செய்யும். சுருக்களை போக்கும்.