தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
39 வயதாகும் இம்ரான் தாகீர் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இலங்கை தொடருக்குப்பின் தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ணத்தில்தான் விளையாட உள்ளது.
இந் நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுக்கள் இம்ரான் தாகீர் வீழ்த்தியுள்ளார்.