சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு சுட்டுக்கொலை

265

ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் அர்னால்டு பெரால்டா மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டுராஸ் தேசிய கால்பந்து அணியின் வீரரான அர்னால்டு(26), நேற்று இரவு தனது சொந்த ஊரான லா செய்பாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்ற அர்னால்டு, கார் பார்க்கிங் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை நடந்திக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கிளப்பிற்காகவும் விளையாடியுள்ளார். சமீபத்தில் ஹோண்டுராஸ் நாட்டின் ஒலிம்பியா கிளப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE