சர்வதேச சுயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன –இரா.சம்பந்தன்

512

சர்வதேச சயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2009ம்; ஆண்டு யுத்தம் தொடர்பில் சாட்சியமளிக்கக் கூடிய சிவிலியன்களை ஒடுக்குவதே இந்த முயற்சியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்த்தமுள்ள வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உள்நாட்டு வெளிநாட்டு சமூகங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
TNA(2)

SHARE