சர்வதேச புகழ் பெற்ற தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் சிரார்த்த தினம் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் செலுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து தனிநாயகம் அடிகளார் பற்றி நிகழ்வின் தலைவர் கலாநிதி அகளங்களால் சிற்றுரையும் ஆற்றப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் கண்ணன், வவுனியா நகர சபை செயலாளர் க.சத்தியசீலன், முன்னாள் நகர சபை உப தலைவர் சந்திரகுலசிங்கம் கவிஞர் மாணிக்கம் ஜெகன், தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் வேட்பாளர் றோய்ஜெயக்குமார் ஆகியோர் கலந்த கொண்டு மாலை அணிவித்தார்கள்.