சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

269

 

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இன்று திங்கட்கிழமை முற்பகல் கண்டிக்கு பயணம் மேற்கொண்டார். கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவரை பஸ்நாயக்க நிலமே வரவேற்றார். பின்னர் இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மகாநாயக்கர்களை சந்தித்து மனித உரிமைகள் ஆணையாளர் ஆசிகளை பெற்றுக்கொண்டார். தனது இலங்கைப் பயணத்தின் நோக்கம் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறினார். இதன்போது சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்ற கோரிக்கை தேரர்களால் விடுக்கப்பட்டது.

SHARE