தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட எந்தவொரு இனப்படுகொலைக்காகவும் இதுவரை நீதி விசாரணை என்பது நடைபெற்றது கிடையாது.
அப்படி இருக்கையில், இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக அரசாங்கம் உள்நாட்டு நீதி விசாரணை நடத்தப் போவதாக கூறுவது நம்பமுடியாத ஏற்க முடியாத விந்தையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.