சிவகார்த்திகேயன், சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக நம்பிக்கை நட்சத்திரமாக இருக்க கூடியவர்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கிடைக்கும் மேடைகளில் மிமிக்ரி செய்து அப்படியே தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்து பயணத்தை தொடங்கியுள்ளார்.
தொகுப்பாளராக மக்களை சிரிக்க வைத்து அப்படியே சினிமா நிகழ்ச்சிகள், விருது விழக்களை தொகுத்து வழங்கி அதிலும் வெற்றிக் கண்டார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நல்ல ரீச் பெற்றவர் அப்படியே ஹீரோவாக படங்கள் நடிக்க தொடங்கினார். இப்போது கோடிகளில் சம்பளம் பெற்று, வசூல் வேட்டை படங்களை கொடுத்து வருகிறார்.
அடுத்து இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சொத்து மதிப்பு
11 ஆண்டுகளில் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்த இவரது சொத்து மதிப்பு ரூ. 110 கோடி என்கின்றனர்.
இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியில் ஆடம்பர பங்களாவும் உள்ளது. இதோடு தனது பூர்வீக கிராமத்திலும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை அண்மையில் கட்டியிருந்தார்.